மன்னாரில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கு புதிய சட்டக்கோவை
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது புதிய சட்டக்கோவையின் கீழ் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மணல் வியாபாரிகளுக்கிடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10.05.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை முன்னிட்டு, அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க கட்டுமானப் பணி
வறிய குடும்பங்கள் வீடு கட்டுவதற்காக 3 கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரசாங்க கட்டுமானப் பணிகளுக்காக 3 கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மணல் கொண்டு செல்லும் போது, ஒரு கிலோமீற்றருக்கு 350 ரூபா வீதம் மேலதிகமாக அறவிட அனுமதி கோரப்பட்டுள்ளது.
மணல் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையில் புதிய சட்டத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |