தமிழர் பகுதியில் பாடசாலை முன்பாக பெற்றோர் விநோதமான முறையில் போராட்டம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம்
அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாகவே இன்று (10) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காலை 7.30 தொடக்கம் பாடசாலை வாயில் கதவை மூடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு கோரி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்த போராட்டம்
இருந்தபோதும் காலை 11 மணிவரை குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் யாரும் வருகை தந்து பதில் எதுவும் வழங்காத நிலையில் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர், ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்