மன்னார் உட்பட 3 பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான மன்னார் (Mannar), பூநகரி (Pooneryn) மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த பிரதேச சபைகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று (10) முதல் மார்ச் மாதம் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
வெளியான வர்த்தமானி
தற்போது தேர்தல்கள் நடைபெற வேண்டிய உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட போது மேற்குறித்த பிரதேச சபைகளின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருந்தன.
குறித்த உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் தேர்தல் அறிவிப்புகள் இந்தச் சபைகளுக்கு விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த 3 பிரதேச சபைகளும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்