யாழில் போதை பொருளுடன் பெண் உட்பட மூவர் சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Law and Order
By Theepan
யாழில் போதைபொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (19) பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி காவல் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நெல்லியடி காவல்துறையினரால் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 14 மணி நேரம் முன்
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
5 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி