மருத்துவ பரிசோதனைகளுக்காக கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான்
குற்றப்புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொழும்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளுக்காக இன்றைய தினம் (02.04.2026) அவர் சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் விசாரணைகளுக்குப் பிறகு, அவர் அங்கிருந்து மீண்டும் அழைத்து செல்லப்பட்டு பின்னர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.
கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட அவர், ஏப்ரல் 12 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் சி.ரவிந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்