தமிழர் பகுதியில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்!
வவுனியாவில் களைக்கட்டிய பொங்கல் வியாபாரம் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் இன்று (14.01.2026)பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
நாளைய தினம் (15.01.2026) தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.
விற்பனை
இந்நிலையில், இன்றைய தினம் (14.01.2026) வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |




