எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி கொழும்பில் பேரணி
முச்சக்கரவண்டி சாரதிகள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியொன்றை முன்னெடுத்ததுடன் ஜனாதிபதியிடம் விசேட மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும், முச்சக்கரவண்டிகளுக்கான ஒற்றை-இரட்டை இலக்க முறையை நீக்குமாறும் கோரியும் இந்தப் பேரணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பேரணி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் “தற்போது வாரத்திற்கு வெறும் 20 லீற்றர் எரிபொருளே முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படுகிறது, அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 2.8 லீற்றர் மட்டுமே கிடைக்கிறது.
ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனு
இந்த மிகக் குறைந்த அளவு எரிபொருளை வைத்துக்கொண்டு எங்களால் தொழில் செய்ய முடியாது, முச்சக்கரவண்டிகளை வீதிகளில் தள்ளிக்கொண்டு செல்லும் நிலையே இனி ஏற்படும்.

எங்கள் தொழிலைப் பாதுகாக்குமாறும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் கோரி ஜனாதிபதியிடம் இந்த மனுவை சமர்ப்பித்தோம். சர்வதேச ரீதியில் ஹோர்முஸ் நீரிணை தற்போது திறக்கப்பட்டுள்ளதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில், அரசாங்கம் தங்களுக்கு உடனடியாக எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், இந்த பேரணியின் மூலம் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்” என அவர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |