ஸ்ரீலங்கா அரசுக்கு கன்னத்தில் அறை - கடுமையாக சாடிய ஹக்கீம்
ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துள்ள செயற்பாட்டினால் இன்று கன்னத்தில் அறை விழுந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இந்த விடயத்திற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் குறித்து நாமல் ராஜபக்ச தெரிவித்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.
சாட்சியங்களும் ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கின்றமை பற்றி ஐ.நா மனித உரிமைப் பேரவைகள் ஆணையாளர் நேற்றைய தினம் உரையாற்றியபோது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அதேபோல ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இழக்கக்கூடிய அபாயமும் வந்துள்ளது.
சிறைச்சாலைக்குள் நீதிமன்றம் செல்கின்ற விடயங்கள் இருக்கின்றதோடு குற்றப் புலனாய்வுப்பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவுகளில் உள்ளவர்கள் பற்றி அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.