ஆட்டம் காணும் உலகம் - ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயார் : ரஷ்யா அதிரடி அறிவிப்பு
ஈரானின் (Iran) அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் ஈரானுக்கு பல நாடுகள் அணு ஆயுதங்களை கொடுக்க தயாராக இருக்கின்றன என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் (Russia) முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ்தான் (Dmitry Medvedev) இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
குறித்த பதிவில் "பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. அணுசக்திப் பொருட்களை செறிவூட்டுகிறோம் என்று நாம் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியும். எதிர்காலத்தில் அணு ஆயுத உற்பத்தி தொடரும்" என்று கூறியுள்ளார்.
அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல்
ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்கிறது என்பதுதான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டு. ஆனால், இதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இப்படி இருக்கையில்தான் கடந்த 13ம் திகதி ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை.
இருப்பினும், ஈரான் கடுமையான பதிலடியை கொடுத்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சங்களை தாண்டி, சென்று தாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியிருந்தது. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதலை நடத்த, இரு நாடுகளுக்கு இடையேயும் போர் மூண்டது.
B-2 விமானம்
இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ட்ரம்ப் B-2 எனும் சிறப்பு விமானங்கள் மூலம் இன்று அதிகாலையில் GBU-57 ரக குண்டை ஈரானின் மூன்று அணு ஆய்வு மையங்களின் மீது வீசியிருக்கிறது.
இதில் ஆய்வு மையங்கள் முற்றிலுமாக அழிந்துப்போனதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால் சேதம் மிக குறைவான அளவில் மட்டுமே இருந்ததாக ஈரான் மறுத்துள்ளது.
இந்நிலையில்தான் ஈரானுக்கு அணு ஆயுதங்களை கொடுக்க பல நாடுகள் முன் வந்திருக்கின்றன என ரஷ்யா கூறியிருக்கிறது. உலகில் அதிக அளவில் அணு ஆயுதங்களை கொண்டிருப்பது ரஷ்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
