ரொனால்டோவா...மெஸ்சியா... விஐபி டிக்கெட்டிற்காக பல கோடிகளை அள்ளி இறைத்த கோடீஸ்வரர்
கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ - மெஸ்ஸி ஒருவரையொருவர் எதிர்கொண்டு விளையாடவுள்ள போட்டிக்கான விஐபி டிக்கெட்டை தொழிலதிபர் ஒருவர் பல கோடிகளுக்கு ஏலத்தில் கேட்டுள்ளார்
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப்பில் இணைந்த பிறகு, அவர் தனது அணியுடன் எதிர்வரும் வரும் வியாழக்கிழமை ( 19) ஒரு நட்பு ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளவுள்ளார்.
இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ஒரு கால்பந்து ஆடுகளத்தில் சந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
டிக்கெட்டின் விலை
இந்த போட்டிக்கான விஐபி டிக்கெட்டை ஏலத்தில் $2.66 மில்லியன் டொலர்கள் கொடுத்து கோடீஸ்வர தொழிலதிபரான முஷ்ரப் அல் கம்தி வாங்கியுள்ளார்.
விஐபி டிக்கெட், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை சந்திக்கவும், வெற்றி பெறும் அணியுடன் புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பளிக்கிறது.
أعلى عرض للتذكرة الخيرية “فوق الخيال" عشره مليون ريال حتى الآن .. قدمه رجل الأعمال العقاري مِشرف الغامدي @mushref999 المدير العام لـ #عقار1 … ريع التذكرة كاملا لمنصة @EhsanSA
— TURKI ALALSHIKH (@Turki_alalshikh) January 13, 2023
ينتهي المزاد يوم 17 يناير. pic.twitter.com/At5Ydk66Wk
ஏலத்தில் ஒரு மில்லியன் ரியாலில் தொடங்கிய இந்த டிக்கெட்டின் விலை தற்போது 10 மில்லியனைத் தாண்டியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது.