உக்ரைன்- ரஷ்யாவின் உக்கிர போர்- உலக வரலாற்றில் முதன் முறையாக விண்வெளியில் உணரப்படும் போரின் தாக்கம்!
உலக வரலாற்றில் முதல் முறையாக, பூமியில் நடைபெறும் போரின் தாக்கம் விண்வெளியில் உணரப்பட உள்ளது என சர்வதேச ஊடகங்கள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனடிப்படையில், ரஷ்யா, செயற்கைக்கோள்களை ஏற்றிச் செல்லும் ரொக்கெட்டில் இந்தியாவின் கொடியை மட்டும் மறைக்காமல் விட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் கேள்விக்குறியாகும் என்று ரஷ்யா கூறியதை அடுத்து, தற்போது தாங்கள் ஏவவுள்ள ரொக்கெட்டில் இருந்து விண்வெளித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளையும் அகற்றியுள்ளனர்.
இந்தியாவின் கொடியைத் தவிர ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் (ROSCOSMOS)-இன் தலைவர் டிமிட்ரி ரோகோசின், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏவப்பட உள்ள ஒன்வெப் (OneWeb) ரொக்கெட்டில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கொடிகளை பைகோனூர் ஏவுதளத்தில் உள்ள தொழிலாளர்கள் மறைப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார்.
ஆனால், அதில் இந்தியாவின் கொடி மட்டும் மறைக்காமல அப்படியே விடப்பட்டுள்ளது. மேலும் வீடியோவை வெளியிட்ட, ரோகோசின் ரஷ்ய மொழியில், “பைக்கோனூரில் உள்ள ஏவுகணைகள் சில நாடுகளின் கொடிகள் இல்லாமல், எங்கள் ராக்கெட் மிகவும் அழகாக இருக்கும் என்று முடிவு செய்தோம்”என்று தெரிவித்தார்.
இதன்படி பைக்கோனூர் ஏவுதளத்தில் உள்ள ஏவுகணைகள், சோயூஸ் ரொக்கெட்டில் உள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து கொடிகளில் வெள்ளை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அவை முழுவதுமாக மறைக்கப்பட்டது.
சோயூஸ் ரொக்கெட் பல்வேறு நாடுகளில் இருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது, இது ஒன்வெப் திட்டத்தின் கீழ் பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்கும். இந்த திட்டம் 648 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவற்றில் 428 செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சோயூஸ் ரொக்கெட்டை பயன்படுத்துகின்றன. பார்தி ஏர்டெல் குழுமம் மற்றும் இங்கிலாந்து அரசு இந்த திட்டத்தின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Стартовики на Байконуре решили, что без флагов некоторых стран наша ракета будет краше выглядеть. pic.twitter.com/jG1ohimNuX
— РОГОЗИН (@Rogozin) March 2, 2022
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்