பாரிய கூட்டத்திற்கு தயாராகின்றது ஐக்கிய மக்கள் சக்தி!
எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அநுராதபுரம் - சல்காடு மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டது.
பொதுஜன பெரமுன நடத்திய சல்காடு பேரணிக்கு சவாலாக இதே மைதானத்தில் மேலும் வெற்றிகரமான பேரணியை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த பேரணியுடன் இணைந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்தும் விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
