சலேவின் பயனற்ற உண்ணாவிரதம்! அரசாங்கம் வெளிப்படுத்திய தகவல்
தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே, வாய்வழியாக மட்டுமே உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் பிற வைத்திய முறைகள் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள மறுக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் எவராலும் இவ்வளவு நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயனற்ற முயற்சி
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், முன்னாள் புலனாய்வுத் தலைவரின் இந்த முயற்சி ஒரு பயனற்ற செயல் என தெரிவித்துள்ளார்.

எனவே, அவர் செய்ய வேண்டியது குற்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து ஆதரவளித்தவர்களையும், குற்றங்கள் தொடர்பான விபரங்களையும் மறைப்பதல்ல என்றும், மாறாக அந்தத் தகவல்களைச் சட்டத்தின் முன் வெளிப்படுத்துவதே ஆகும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |