இலங்கைப் பிரதமர் நடாத்திய இரகசிய வதை முகாம் (காணொளி)
1988 ஆம் ஆண்டு இலங்கையின் கம்பகா மாவட்டத்தின் வட்டலந்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓர் சித்திரவதை முகாம்.
கிரிபத்கொட - பியகம வீதியின் சந்தியில் இருந்து தெற்காக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த 'இரசாயன உர ஆலை அதிகாரிகள் விடுதியையே' சிறிலங்கா காவல்துறையின் சி.எஸ்.யூ எனும் சிறப்பு பிரிவு தனது முக்கியமான முகாமாக மாற்றியிருந்தது.
சிறிலங்கா காவல்துறையின் சிரேஷ்ட அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார்.
அந்த விடுதி வளாகத்தில் இருந்த 64 வீடுகள், சிலவற்றில் சிறிலங்கா காவல்துறையினர் தங்கியிருந்தார்கள். பலவற்றில் காவல்துறையினரால் கடத்திவரப்பட்ட இளைஞர் - யுவதிகள் நிர்வாணமாக கைகள், கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில், அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
சித்திரவதை என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை பார்க்கவேண்டுமாக இருந்தால், அந்த வட்டலந்த சிறப்பு முகாமுக்கு சென்று திரும்ப வேண்டும் என்று கூறுவார்கள்.
அந்த அளவுக்கு சித்திரவதை எனும் பெயரில் மனிதத்திற்கு எதிரான கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.
அந்த வட்டலந்த முகாமில் இருந்து தப்பி வந்த ஒருவர் கூறும் விபரங்கள் மனதை உலுக்க வைக்கின்றன.
இந்தக் கொடூரங்களை மேற்கொள்ள அனுமதித்த பிரமுகர் வேறுயாருமல்லர். இன்று சிறிலங்காவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்க தான்.
சித்திரவதை எனும் பெயரில் மனிதத்திற்கு எதிரான கொடூரங்கள் அரங்கேறிய பின்னணி தொடர்பில் ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,,