போக்குவரத்து சபை ஊழல் நிறைந்த இடமாக மாறியுள்ளது - அமைச்சர் வெளியிட்ட தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Bimal Rathnayake
By Raghav
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஊழல் நிறைந்த இடமாக மாறியுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை
இதன்போது பிமல் ரத்நாயக்க இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் டிப்போவின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார்.
இதற்கிடையில், பாதுகாப்பான மற்றும் தரமான பொது போக்குவரத்து சேவையைப் பராமரிக்கும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்பாகப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளை 070-4775030 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்