பயங்கரவாத சட்ட விவகாரம் - இலங்கையில் சிதைக்கப்படும் ஜனநாயகம்; ஜூலி சங் விசனம்!
சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களைப் பயன்படுத்துவது, இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக அமைகின்றது என சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துவதற்கு தாம் சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனுமதி வழங்கிய ரணில்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
ஜூலி சங் கரிசனை
Using laws that don’t conform with international human rights standards – like the PTA – erodes democracy in Sri Lanka. We encourage the government to uphold the rights of the people to express their views.
— Ambassador Julie Chung (@USAmbSL) August 22, 2022
இவ்வாறான நிலையிலேயே அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்டோரை தடுத்து வைக்கும் உத்தரவில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் மேரி லோலர் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)