சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka
China
By pavan
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் குறித்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
குறித்த விஜயத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை தனது இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில் இந்த விஜயம் அமையவுள்ளது.
கடந்த வருடம் அதிபர் பதவியேற்ற பின்னர் சீனாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயம் இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.