மீண்டும் சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
இலங்கைக்கு அண்டை நாடான இந்தியாவில் கணிசமான அளவு கொரோ தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையிலும் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், இலங்கையில் மீண்டும் முகக்கவசத்தினை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மீண்டும் சீனாவைத் தாக்கும் கொரோனா

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான இந்தியாவும் அதன் சுகாதார நிலைமைகளை இறுக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையின் தயார்ப்படுத்தல்கள் என்ன என்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்,
“முகக்கவசத்தின் முக்கியம் தொடர்பில் மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இந்நிலையில் நாம் அதனை காட்டயமாக்கத் தேவையில்ல. மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள். அவர்கள் அனைவரும் இந்நேரத்தில் ஒன்றிணைந்து இதனை அணிவதே சிறந்தது.
முகக்கவசத்தினை மட்டும் பாவிக்காது ஏனைய சுகாதார வழிமுறைகளை கையாளுமாறும் மக்களிடம் கோருகிறோம். இடைவெளிகளை பேணுதல், கைகளை சுத்தப்படுத்தல், கை சுத்தம் செய்யும் திரவம் (சனிடைசர்) போன்றவற்றினை பாவித்தல் இவைகளும் இதில் அடங்குகின்றன.
பரிசோதனைகள் நிறுத்தம்

இவற்றினை கடைபிடித்தால் இந்த நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் விமான நிலையங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கவில்லை, ஏனெனில் அது விஞ்ஞானபூர்வமாக தோன்றவில்லை.
உலகளவில் கொரோனா அதிகரித்த போது இலங்கையில் தொற்றாளர்கள் குறைய இருந்த காலகட்டத்தில் பரிசோதனைகளை முன்னெடுத்த போதிலும் அது வெற்றியான ஒரு முறையல்ல.
இந்த பரிசோதனைகளில் எளிதில் தொற்றாளர்கள் இனங்காணப்பட மாட்டார்கள். எனவே இப்போது உலகில் எந்த நாட்டிலும் இந்த முறைகள் பாவிக்கப்படுவதில்லை. நாமும் அதனை நிறுத்திவிட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.