அரசின் மூடநம்பிக்கையே இத்தகு நிலைக்கு காரணம் - வெளிப்படையாக கூறிய முஜிபுர் ரஹ்மான்

covid mujibur rahman sgb sri lanka
By Vanan May 04, 2021 11:36 PM GMT
Report

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்தமைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

பிசிஆர் பரிசோதனைகளை குறைக்குமாறு அரசாங்க தரப்பு தம்மிடம் வேண்டியதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வெளிப்படையாகவே கூறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா பரவல் இல்லை என்ற தோற்றப்பாட்டில் தான் அரசாங்கத்தின் தலைவர் முதல் சிறிய தலைவர்கள் வரை நடந்து கொள்கின்றனர்.

ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எத்தகைய சுகாதார நடைமுறைகளுக்கும் பாரியளவில் முக்கியத்துவம் கொடுக்காது கலந்து கொண்டு வந்தார்.

சுகாதார தரப்பு அறிவிக்கும் சுகாதார ஒழுங்குகள் சாதாரண மக்களுக்கு மாத்திரம் தான் என்ற வண்ணம் அரசாங்க தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.

திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் சாதாரண மக்கள் பங்கேற்றால் இராணுவத்தினரை பயன்படுத்தி அடக்கு முறையைப் பிரயோகிக்கின்றனர்.

ஒரு சட்டம் இரு விதமாக செயற்படுத்தப்படுகிறது. இது நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடும் செயற்பாடாகும்.

கொரோனா ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து விஞ்ஞானபூர்வ முடிவுகள் நடைமுறைகள் குறித்து கவனத்திற் கொள்ளாது மூட நம்பிக்கைகளின் பக்கம் சென்றனர். பல பாணிகளின் பக்கம் சென்றனர். விஞ்ஞான நடைமுறைகளை புறக்கணித்தனர். இன்றைய நிலைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகள் தான் காரணம் என்றார்.    

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026