முகமாலையில் அடையாளப்படுத்தப்பட்ட மனித எச்சம்- சம்பவ இடத்திற்கு விரைந்த நீதவான்!
police
kilinochchi
court
northern province
sri Lanka
mukamalai
By Kalaimathy
முகமாலைப் பகுதியில் மனித எச்சம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து இன்றைய தினம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி மாவட்ட பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பளை காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டது.
அப்பகுதிக்கு இன்று விஜயம் செய்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டிருந்தார்.
இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 3 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்