உள்ளூராட்சி சபைத் தேர்தலும் தமிழ் மக்களின் மக்களின் நிலைப்பாடும்
இலங்கையின் (Sri Lanka) உள்ளூராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்திருந்த சூழ்நிலையில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நான்கு விதமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு நடத்தப்படும் நான்கு விதமான தேர்தல்களில் மிகவும் சிக்கலான தேர்தல் முறையாக இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை காணப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் வடக்கு - கிழக்கு மற்றும் தென்னிலங்கையிலும் பல அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மேலும் யாழ் மாவட்டத்தில் அல்லது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது, தமிழ் மக்கள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள் என்பது தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் “தீர்ப்பாயம்”நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
