வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை : தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த எச்சரிக்கையானது நேற்று(4) அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை நடத்துவதற்காக, செப்டம்பர் 15 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்பாகவே அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)
வேலைநிறுத்தப் போராட்டம்
மார்ச் மாதம் வழங்கிய எழுத்து மூல உறுதிமொழிக்கு அமைய அதிபர் செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளன பேச்சாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்தே இளங்கசிங்க கூறுகையில், “2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரிவிதிப்பு முறைமையில் திருத்தம் செய்யப்படும் என அதிபர் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த போதிலும் அது நடைபெறவில்லை.
வரிப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க தவறும் பட்சத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தயங்கமாட்டோம்” என்றார்.