கட்டுநாயக்கவில் போலி கடவுச்சீட்டுடன் கைதான பெண்
போலி கடவுச்சீட்டின் மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு (United Kingdom) சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் (Sri Lanka) பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த வகையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் திருகோணமலையில் (Trincomalee) வசிக்கும் 24 வயதுடையவர் என விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிய வருகையில், சந்தேக நபர் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை கவுண்டருக்கு வந்து கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்பித்துள்ளார், அங்கு கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதை அவதானித்த அதிகாரிகள் அவரை தலைமை குடிவரவு அதிகாரியிடம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப சோதனை
இதைத்தொடர்ந்து, நடந்த தொழில்நுட்ப சோதனையில், இந்த விமான பயணச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளதையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்லவதற்கு உதவியவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)