இலங்கை தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
வாகனப் போராட்டம்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜூன் 29 அன்று இலங்கையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள "வாகனப் போராட்டம்" குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கை
“எதிர்ப்பு முயற்சி அனைத்து வாகனங்களையும் சாலைகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு நடவடிக்கையானது வீதி நெரிசலை ஏற்படுத்தும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் அமைதியான முறையிலான இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது விரைவாக வன்முறையாகவும் மாறக்கூடும். எனவே இவ்வாறான போராட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏதாவது உதவி தேவைப்படுபவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening