சிறிலங்கன் ஏர்லைன்ஸின் அதிரடி: பெங்காக் முகாமையாளர் பணியிடை நீக்கம்!
பெங்காக் விமான நிலையத்தில் விமான ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சிறிலங்கன் ஏர்லைன்ஸின் பெங்காக் நாட்டு முகாமையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட முகாமையாளர், பெங்காக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் மற்றும் நிலைய முகாமையாளருடன் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் மோதல் காரணமாக சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் மேற்படி முடிவெடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 2-ஆம் திகதி விமான ஊழியர்கள் பயணிகள் சோதனையை மேற்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும், பயணிகள் இருக்கும் பகுதியிலேயே மோதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீறப்பட்ட நிறுவனத்தின் விதிகள்
அதன்படி, சம்பந்தப்பட்ட முகாமையாளரின் செயல் "சட்டவிரோதமானது மற்றும் நிறுவனத்தின் விதிகளுக்கு எதிரானது" என்று ஏர்லைன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பெங்காக் விமான நிலைய காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த அதிகாரியை உடனடியாக இலங்கை திரும்புமாறு சிறலங்கன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |