உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2026-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை (24) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்துத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரையிலான காலப்பகுதியில் நிகழ்நிலை வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால நீடிப்பு
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் முடிவடைவதோடு, எக்காரணம் கொண்டும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் 0112785922, 0112784208 மற்றும் 0112784537 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |