கதிர்காமம் சென்றடைந்தது சுப்பிரமணியம்
சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர் பாதயாத்திரை குழுவில் இருந்து அகற்றி காவல்துறையினரின் அனுமதியுடன் முச்சக்கரவண்டி ஊடாக கதிர்காமத்துக்கு எடுத்துச் சென்று சேர்க்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலையில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது குறித்த நாயின் உரிமையாளர் கதிர்காம முருகன் ஆலயத்துக்கு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை குழுவுடன் தனது பயணத்தை தொடங்கி முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் ஊடாக சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் கடந்து பாணமையை சம்பவ தினமான நேற்று இரவு சென்றடைந்தார்
நாய் உரிமையாளருடன் வாக்குவாதம்
இந்த நிலையில் பாதயாத்திரை குழுவினருக்கு தலைமை தாங்கி சென்றவருக்கும் நாய் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தையடுத்து அந்த குழுவில் இருந்து நாய் உரிமையாளர் பிரிந்து பாணமை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கி கொண்டார்

அதன் பின்னர் நாய் உரிமையாளர் பாணமை காவல் நிலையத்திற்கு சென்று சுப்பிரமணியம் என பெயர் வைத்து நான் வளர்த்து வந்த எனது நாய், நான் பாதை யாத்திரை செல்லும் போது என்னுடன் பின் தொடர்ந்து வந்துள்ளது இந்த நாயை வைத்து பாதையாத்திரை குழுவினை சேர்ந் ஒருவர் பல மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
காவல்துறை அளித்த அனுமதி
எனவே நாயை கதிர்காமத்துக்கு எடுத்துச் செல்லப் போவதாக காவல்துறையினரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் அனுமதியளித்தனர்.

இதனையடுத்து குறித்த நாயை அதன் உரிமையாளர் முச்சக்கர வண்டி ஒன்றின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை (7) காலையில் கதிர்காமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |