பாடசாலை மாணவர்களுக்கு புதிய கல்விமுறை - திடீரென வந்த அறிவிப்பு

school student new-curriculum
By Jaso Nov 07, 2021 03:51 PM GMT
Report

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் அடுத்தகட்ட கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய முறையொன்று தயாரிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொவிட் தொற்று காரணமாக, பாடசாலை மாணவர்களுக்கு இல்லாது போன கல்வியை மீள வழங்கும் வகையிலேயே இந்த புதிய முறை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன (Sunil Jayantha Navaratne)தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களில் அத்தியாவசிய தரப்பினர் குறித்து அதிக கவனம் செலுத்தி, இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மாணவர்கள் தவறவிட்ட கல்வியை, வழங்கும் நோக்குடன் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதிக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில சந்தர்ப்பங்களில் இந்த திட்டத்தை நிறைவு செய்யும் காலப் பகுதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கு, 2022ம் ஆண்டு டிசம்பர் வரை கல்வி கற்பிக்கும் யோசனையை தாம் முன்வைத்துள்ளதாகவும், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் வழமைக்கு திரும்புவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த திட்டம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து தீர்மானம் எடுக்க, பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியே இந்த திட்டத்தை தாம் தயாரித்துள்ளதாகஅவர் தெரிவித்தார். அதனால், பரீட்சைகள் நடைபெறும் காலப் பகுதியை பொறுத்து, அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்..

மாணவர்களினால் தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களை ஆரம்பத்தில் நிறைவு செய்வதற்கான யோசனையையே தாம் முதலில் முன்வைத்துள்ளதாக அவர் கூறுகின்றார். தற்போதுள்ள தரத்திலிருந்து மற்றுமொரு தரத்திற்கு மாணவர்கள் செல்லும் போது, அவர்களுக்கு பரீட்சைகளை நடத்தி, அவர்களின் திறமைகளை கணிப்பிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015