ரி20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கம்
இந்த ஆண்டு நடைபெற்ற ரி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தொடருக்குப் பிறகு அவரது மோசமான செயல்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (பிசிசிஐ) அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் அடுத்த நிரந்தர ரி20 அணித்தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அணியிலிருந்தும் நீக்கம்
இந்த சுற்றுமார்ச் மாதம் முடிவடைந்த ரி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியா ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அங்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்தியா விளையாட உள்ளது.

பயணத்திற்கான இந்திய ரி20 அணி சனிக்கிழமை (4) அன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், 35 வயதான சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சச்சினுக்கு பின்னர் அணிக்குள் வரும் இளவயது வீரர்
இருப்பினும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, வரவிருக்கும் தொடருக்கான ஆயத்தப் பணிகளுக்காக அணியில் அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டால், 15 வயதான சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்படும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 11 மணி நேரம் முன்