சுற்றுலா சென்றவேளை நிகழ்ந்த அனர்த்தம்
Sri Lanka Police Investigation
Tourism
By Sumithiran
a year ago
திக்வெல்ல பிரதேச செயலகத்திற்கு அண்மித்த கடலில் நீராடச் சென்ற நான்கு பேரில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக திக்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் 170 பேர் சுற்றுலாவிற்கு சென்று கொண்டிருந்த போது, பிரதேச செயலக கடற்கரைக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஓய்வெடுப்பதற்காக தங்கியிருந்த போது, நால்வர் இவ்வாறு நீராடச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நீராடசென்றவேளை
பலாங்கொடை, ரஸ்ஸகல உவெல்ல பகுதியைச் சேர்ந்த தலகஹாரவே லஹிரு சம்பத் ரணசிங்க என்ற 27 வயதுடைய திருமணமாகாத இளைஞரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி