வவுனியாவில் இலஞ்சம் கோரிய காவல்துறை அதிகாரி - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran May 22, 2025 12:26 PM GMT
Report

புதிய இணைப்பு

இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா (Vavuniya) - பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி காணி பிணக்கு ஒன்று தொடர்பில் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டபோது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் (22) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வவுனியாவில் இலஞ்சம் கோரிய காவல்துறை அதிகாரி - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | The Official Who Demanded A Bribe Was Jailed

இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

வவுனியாவில் இலஞ்சம் பெற்ற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிப்பதாக ஏமாற்றும் இஸ்ரேல்

காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிப்பதாக ஏமாற்றும் இஸ்ரேல்

பொறுப்பதிகாரி 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று பூவரசங்குளம் காவல் நிலையத்திற்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது கைதுசெய்துள்ளனர்.

வவுனியாவில் இலஞ்சம் கோரிய காவல்துறை அதிகாரி - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | The Official Who Demanded A Bribe Was Jailed

காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று (22) வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் கஜமுத்துடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பில் கஜமுத்துடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது

இங்கிலாந்தில் வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இங்கிலாந்தில் வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023