யாழ்ப்பாண நகரப்பகுதியில் மூன்று இளைஞர்கள் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்றையதினம் போதை மாத்திரைகளுடன் 17 தொடக்கம் 18 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறைஅத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண காவல்துறை போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி