வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கு வாய்ப்பு
weather
today
sri lanka
By Vanan
Courtesy: Nagamuthu Pradeeparaja
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Pradeeparaja) தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதனால் இன்று (20) முதல் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நெல், வெங்காயம், உழுந்து ஆகிய பயிர்களின் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு தமது அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது எனவும்,
மழை கிடைத்தால் அது வேகமான காற்றுடன் கூடிய மழையாகவே கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்