வீதியில் தூங்கிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் ஒழுங்கையில் உறங்கிய இளைஞன் மீது டிப்பர் வாகனம் ஏறிச் சென்றதில் அவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி காவல்துறையினர் இன்று (02.08) தெரிவித்தனர்.
நேற்று இரவு (01.08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இளைஞன் தூங்கியதை அறிந்திராத மைத்துனன்
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டு ஒழுங்கையில் படுத்து உறங்கிய இளைஞனை கவனிக்காத நிலையில் டிப்பர் வாகனத்தைச் செலுத்தி வந்த குறித்த இளைஞனின் மைத்துனர் வீடொன்றில் சல்லிக் கல்லினை இறக்கிவிட்டு வாகனத்தை திருப்பியுள்ளார்.
இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் இளைஞன் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் வாகனம் ஒழுங்கையில் படுத்திருந்த அவர் மீது ஏறியுள்ளது. இன்று (02.08) காலையிலேயே குறித்த இளைஞன் டிப்பர் வாகனம் ஏறியதில் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நெடுங்கேணி காவல்துறையினர்மேலதிக விசாரணை
இளைஞன் வாகனத்தில் நசுங்கிய நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்த மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணி காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி காவல்துறையினர்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
