ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
வருங்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்குகளுக்கு மத்தியில் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கோரிக்கை
மேலும் தெரிவித்த அவர், தற்போதைய சூழல் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான அமெரிக்காவின் கோரிக்கை மிகவும் எளிமையானது என்று கூறியுள்ள ட்ரம்ப், ஈரான் அணுஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதே அந்த முதன்மையான நிபந்தனை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் அணுஆயுதம் இருக்க முடியாது எனவும் அவர்களிடம் அணுஆயுதம் இருக்கவும் செய்யாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரோன் தாக்குதல்கள்
அத்தோடு அவர்களிடம் அணுஆயுதம் இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தி விடுவார்கள் என்பது தெரியும் எனவும் எனவே அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வப்போது ஈரான் நடத்தும் ட்ரோன் தாக்குதல்கள் போன்ற சிறிய இடையூறுகளைத் தவிர, அந்த முக்கியமான கடல் வழிப் பாதை அமெரிக்காவின் முழு அதிகாரத்தின் கீழ் இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |