மோதல்களுக்கு மத்தியில் திடீரென ட்ரம்பை தொடர்புகொண்ட புடின்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இருவரும் நீண்ட நேர தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயத்தை ட்ரம்ப் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல்
அதில் “புடின் இன்று காலை அழைத்து, என் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அதைவிட முக்கியமாக, ஈரானை பற்றியும், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடக்கும் தாக்குதல்கள் குறித்து விரிவாக பேசினார்,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இருவரும் இஸ்ரேல் ஈரான் இடையிலான சிக்கல்கள் முடிவுக்கு வரவேண்டும் என ஒருமித்த பார்வை கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் போர்
“இஸ்ரேல்-ஈரான் போர் முடிவடைய வேண்டும் என்பது அவருக்கும் எனக்கும் ஒரே நோக்கம். இதைச் சொல்லும்போது, அவரின் உக்ரைன் போரும் முடிவடையவேண்டும் என்று நான் விளக்கினேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உரையாடலில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்துப் குறைவாகவே பேசப்பட்டதாகவும், அந்த விவகாரம் அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
