பிரித்தானிய விசா விதிகளில் அதிரடி மாற்றம் : வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானிய (United Kingdom) அரசு புதிய விசா விதிகளை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விதிகளின் அடிப்படையில் பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் ஒன்பதாம் திகதி முதல் வெளிநாட்டிலிருந்து பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க விரும்பும் நிறுவனங்கள், முதலில் பிரித்தானியாவில் உள்ளவர்களையே வேலைக்கு அமர்த்த முயற்சி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு முன்னுரிமை
ஆள்சேர்ப்பில் வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் நிலை குறைய, உள்நாட்டிலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, திறன் வாய்ந்த தொழிலாளர் விசாவிற்கான (Skilled Worker visa) குறைந்தபட்ச ஊதியம் £23,200-லிருந்து £25,000-ஆக அதிகரிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரித்தானிய தொழிலாளர்களுக்கு உயர்ந்த சம்பளம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால மாணவர் விசா (short-term student visa) பெற உண்மையான மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஆறு முதல் 11 மாதங்களுக்கு ஆங்கிலம் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசா கோரிக்கைகள் பத்திரமாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா முறைகேடுகள்
மாணவர் விசா முறைகேடுகள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு (2024) 395,100 வேலை/கல்வி விசாவிற்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மருத்துவ பணியாளர்கள், பராமரிப்பு பணியாளர்களின் விண்ணப்பங்கள் 79% குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, 42 சதவீத விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும் இது புதிய சட்டங்களின் தாக்கமாக பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள், பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதை முதன்மையாகக் கொண்டுள்ளன என்றும் விசா முறைகேடுகளை தடுக்க முயல்கின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்