உக்ரைன் கிராமங்களில் நுழைந்த ரஷ்ய படைகள் பெண்கள் மீது துப்பாக்கி முனையில் வன்கொடுமை- நேரடி சாட்சியான பெண்!
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக படையெடுப்பை மேற்கொண்டு வரும் நிலையில், ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்ட கிராமங்களுக்குள் பல குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், உக்ரைனின் ஒரு கிராமத்திற்குள் நுழைந்த ரஷ்ய துருப்புக்கள் இளம் தாய் ஒருவரை துப்பாக்கி முனையில் துஸ்பிரயோகம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட 33 வயதான பெண் ஒருவர் கருத்துத் தெரியவருகையில்,
கடந்த 8 ஆம் திகதி கிராமத்துக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்தனர். அதில் இரண்டு வீரர்கள் எங்கள் வீட்டிற்குள் வந்தனர். அதன் போது ஏன் இங்கு வருகிறீர்கள் என என் கணவர் கேட்ட நிலையில் அவரை சுட்டு கொன்றனர்.
பின்னர் என் மகன் கண்முனே துப்பாக்கி முனையில் என்னை இருவரும் துஷ்பிரயோகம் செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தான் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பிலும் கணவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாகவும் அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் தன்னை கொன்றுவிடலாமா என்றும் இருவரும் பேசி கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வெளியே சென்ற அவர்கள் மீண்டும் வந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலும் தந்தை இறந்துவிட்டார் என்பதை என் மகன் உணராமல் உள்ளான். நான் சீரழிக்கப்பட்டதையும், என் கணவர் கொல்லப்பட்டமை தொடர்பிலும் உக்ரைன் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரேனிய அதிகாரிகளால் அதிகாரபூர்வமாக விசாரிக்கப்படும் ரஷ்ய ராணுவத்தினரால் சீரழிக்கப்பட்டதாக கூறப்படும் முதல் வழக்கு இதுதான் என்று உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.