டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!
நாட்டில் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள டெங்கு தொற்றின் தாக்கத்தால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரூஹுனா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியும், மாத்தறை, தெனியாயாவைச் சேர்ந்தவருமான 23 வயதுடைய சந்தலி தாரிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கலை பீட மாணவர் சங்கம் மற்றும் பொது மாணவர் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும், தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
உருக்கமான குறுஞ்செய்தி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தாலி தாரிகா, தனது உடல்நிலை சரியில்லை என்பதைத் தெரிவித்து நடனக் குழுவினருக்குச் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர், "நான் மரணிக்கவில்லை என்றால், வருவேன் நண்பர்களே" என்ற உருக்கமான குறிப்பை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளார்.
மாணவி சந்தாலி தாரிகாவின் துரதிர்ஷ்டவசமான இந்த மரணம், நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு பெருந்தொற்றின் மோசமான தன்மைக்கு ஒரு தெளிவான அறிகுறியாகும்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் நோய்ப்பரவியல் பிரிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு தீவு முழுவதும் கிட்டத்தட்ட 37,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 50,000-ஐத் தாண்டிவிட்டதாக சில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு
நாட்டில் சமீபத்தில் பெய்த பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால், இந்த நோயின் பரவல் கட்டுக்கடங்காமல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸ் நோயின் பரவலில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ள நிலையில், இச்சூழலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சு பல பகுதிகளை உயர் அபாய மண்டலங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுர மற்றும் உயிரிழந்த மாணவரின் சொந்த ஊரான மாத்தறை மாவட்டம் ஆகியவை இந்த உயர் அபாய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 9 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்