ipl போட்டியில் சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி - இந்திய அணியில் இடம் - பக்கத்தில் முக்கிய புள்ளி
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 15 வயது இளம் துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), இந்த தொடரில் அதிரடியான ஓட்ட விகிதத்தில் ஓட்டங்களைக் குவித்து Orange Cap விருதை வென்றுள்ளார்.
அத்துடன், ஒரே ஐ.பி.எல் பருவத்தில் அதிக ஓட்டங்கள் மற்றும் சிறந்த ஓட்ட விகிதம் ஆகிய இரண்டிலும் முதலிடம் பிடித்த கிறிஸ் கெய்லின் (2011) சாதனையையும் சூர்யவன்ஷி சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் 5 பட்டியல் மற்றும் சாதனையாளர்கள் வரிசையில் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளார்.
அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்
வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 48.50 சராசரியுடன் 776 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அசாத்தியமான 237.30 ஸ்ட்ரைக்-ரேட்டில் விளையாடியுள்ள இவர், இந்த ஒரே சீசனில் மட்டும் 1 சதமும், 5 அரைசதங்களும் மற்றும் சாதனை அளவாக 72 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகள் உட்பட இந்தத் தொடரில் மொத்தம் மூன்று முறை 90 களில் இவர் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார்.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலி (973), ஷுப்மன் கில் (890), ஜோஸ் பட்லர் (863), டேவிட் வார்னர் (848) ஆகியோருக்கு அடுத்தபடியாக வைபவ் (776) 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்
இதேவேளை, மைதானத்தின் விஐபி அறையில் ஐசிசி தலைவரும்இ முன்னாள் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா அருகில் வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருந்த விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகி உள்ளது.

கிரிக்கெட் உலகின் மிக சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் ஜெய் ஷா அருகிலேயே வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், "இனி வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி" எனப் பதிவிட்டு வருகின்றனர்.
பிசிசிஐ அவரை மிக விரைவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட வைக்கும் என்றும், அவரது அசாத்திய திறமைக்கு இந்த அங்கீகாரம் தகுதியானது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |