தொடர் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
கடந்த ஓராண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்றைய (31) சந்தை வர்த்தகத்தின் முடிவில், அமெரிக்க டொலரின் மதிப்பு, கொள்முதல் விலை - ரூ. 311.76 ஆகவும், விற்பனை விலை - ரூ. 319 ஆகவும் பதிவாகியுள்ளது.
பெப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட வெளிப்புற அழுத்தங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலும் ரூபாயின் இந்த மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுத்தன என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உபரி பதிவு
ரூபாயின் மதிப்பு சரிந்தபோதிலும், நவம்பர் 2025 முதல் காணப்படும் போக்கைத் தொடரும் வகையில், பெப்ரவரி 2026-ல் நடப்புக் கணக்கு உபரி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, 2026 ஜனவரி-பிப்ரவரி காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒட்டுமொத்த உபரி, 487 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இருப்பினும், பெப்ரவரி 2026 “வெளித்துறை செயல்திறன்” அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வர்த்தப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.1 பில்லியன் டொலராக இருந்த பற்றாக்குறை, 2026-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் மட்டும் தனிநபர் மற்றும் வர்த்தக வாகன இறக்குமதிக்காக 194 மில்லியன் டொலர் செலவிடப்பட்டது.
வாகன இறக்குமதி
இதன் மூலம், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு 418 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

சீன மக்கள் வங்கியுடனான (PBOC) மாற்று வசதியையும் சேர்த்து, இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு 2026 பெப்ரவரி மாத இறுதிக்குள் 7.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டுக் கடனைத் தொடர்ந்து செலுத்தி வந்தபோதிலும், சந்தையிலிருந்து மத்திய வங்கி அந்நியச் செலாவணியை அதிக அளவில் வாங்கியதன் காரணமாக கையிருப்பு அளவு அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கி மேலும் தெரிவிக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்