கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளது.
குறித்த விடயம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், களட்டுவாவ மற்றும் லப்புகம நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகம் பெறும் பதுக்கா, ஹோமகம, பெலவத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்.
நீர் விநியோக அட்டவணை
அதன்படி, பதுக்கா பகுதியில் ஏப்ரல் 2ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி இரவு 8 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோமகம பகுதியில் ஏப்ரல் 3ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 4ஆம் திகதி இரவு 8 மணி வரை நீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், பெலவத்தை பகுதியில் ஏப்ரல் 4ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி இரவு 8 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கல் மற்றும் வடிகால் சபை
இந்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நீர் விநியோகம் இல்லாத நாட்களில் மாற்று ஏற்பாடுகள் மூலம் தொடர்ச்சியான நீர் வழங்கலை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பதுக்கா பகுதியில் ஏப்ரல் 7ஆம் திகதி, ஹோமகம பகுதியில் ஏப்ரல் 8 ஆம் திகதி மற்றும் பெலவத்தை பகுதியில் ஏப்ரல் 9ஆம் திகதி மீண்டும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை மேலும் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்