இன்று இரவு இடியுடன் கூடிய கன மழை - நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை
TN Weather
Weather
By Kiruththikan
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 மில்லிமீற்றர் அளவில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

இதன் காரணமாக மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துகொள்ளவும், தேவையற்ற இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்குமாறும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
3ம் ஆண்டு நினைவஞ்சலி