இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலா? விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்
srilanka
wimal weerawansa
By Vasanth
இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் கூறியுள்ள போதும் அதனைச் செய்ய முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் பதிலளித்த அவர், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய தேர்தல் முறை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதன் சட்டமூலத்தை தயாரித்து வட்டாரத் தெரிவு தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்கான காலத்தை ஒதுக்கி, சட்டமா அதிபரின் கைகளுக்குச் சென்று - மீண்டும் அமைச்சரவைக்கு வந்து....
இவ்வாறு நீண்ட நடைமுறை இருப்பதால் இவ்வருடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என்றார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்