யாழில். போதை மாத்திரைகளுடன் சிக்கிய அறுவர்!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 06 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரிடமிருந்தும் 60 போதை மாத்திரைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட 06 பேரையும் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் இரு இளைஞர்கள் மருந்து விற்பனை பிரதிநிதிகள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 3 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
12 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி