யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்
யாழில் (Jaffna) போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைத நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - மணியம் தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒரு இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த இளைஞர் ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதனடிப்படையில், யாழ்ப்பாண காவல்துறை போதை தடுப்பு பிரிவினர் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கோப்பாய் பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கும் போது அந்தத் தகவல்கள் சந்தேக நபர்களுக்கு சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்ததன் காரணமாக குறித்த காவல் நிலையத்துக்கு சென்று விசாரணை செய்து பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே சந்தேக நபர்களுக்கு தகவல்களை வழங்குவதால் பொதுமக்கள் காவல்துறையினரிடம் செல்ல அச்சப்படும் சூழல் காணப்படுகிறது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இது போன்ற விடயங்கள் நடைபெறக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் காவல்துறையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கோப்பாய் பிரதேச அமைப்பாளர் தோழர் விவேக், பிரதேச சபை உறுப்பினர் கஜீபன் மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
