வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Israel
By Sathangani Sep 20, 2025 07:52 AM GMT
Report

கட்டுமான பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபரின் மனம் மற்றும் உடல் நிலை சரியில்லாததால், அவரை மீண்டும் அழைத்து வருவதற்காக தூதரகத்தின் தொழிலாளர் நலப் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரியும் அவருடன் கொழும்புக்கு சென்றதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கைக்கு வருவதற்காக நேற்று (19) காலை டெல் அவிவ் விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த கடற்றொழில் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு : எழுந்துள்ள கண்டனம்

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த கடற்றொழில் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு : எழுந்துள்ள கண்டனம்

கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார்

மனநிலை பாதிக்கப்பட்ட அவரை கடந்த சில தினங்களாக பல இலங்கையர்கள் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் தூதரகம் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் | 8 Sri Lankans Including A Woman Deported

அவரைத் தவிர, இஸ்ரேலுக்கு வந்து போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மற்றொரு இலங்கையர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவரது கடவுச்சீட்டு தொலைந்து போனதால், அவருக்கு கட்டணம் வசூலிக்காமல் தற்காலிக கடவுச்சீட்டு வழங்க தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொதி! அதிர்ச்சியில் அதிகாரிகள்

மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொதி! அதிர்ச்சியில் அதிகாரிகள்

சுட்டிக்காட்டிய தூதுவர் 

இந்த இருவருடன், மது மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக நெருக்கடியை எதிர்கொண்ட 07 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 07 பேருக்கு மேலதிகமாக, மது அருந்திய பின்னர் குளியலறையில் வழுக்கி விழுந்து நிரந்தர ஊனமுற்ற ஒரு நபரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தூதுவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் | 8 Sri Lankans Including A Woman Deported

இதற்கிடையில், கடந்த காலங்களில் இஸ்ரேலில் உயிரை மாய்த்துக் கொண்ட இரண்டு இலங்கையர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனவே, மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர்களை இஸ்ரேலில் வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று தூதுவர் கேட்டுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

பிரான்சில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026