புங்குடுதீவில் தனியார் பேருந்து உரிமையாளர் வெட்டிக்கொலை : மற்றுமொரு சந்தேக நபரும் சிக்கினார்
Jaffna
Sri Lanka Police Investigation
Murder
Arrest
By Theepan
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று (21) ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பதாக குறித்த கொலைக் கும்பலின் பிரதான சந்தேக நபரான அனலைதீவை சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்
ஐந்து மாதங்களின் பின்னர் சிக்கிய சந்தேக நபர்
அந்நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் மற்றுமொரு சந்தேக நபர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுள்கதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி