நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Dayasiri Jayasekara NPP Government
By Sathangani Sep 25, 2025 06:08 AM GMT
Report

கடந்த காலங்களை விட, இந்த அரசாங்கம் நீதித்துறையில் அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, தமக்கு ஏற்றவாறு நீதிபதி ஆயங்களை நியமித்து வழக்குகளை விசாரிக்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசியலமைப்புக்கமைய, நீதிபதி அல்லது நீதியரசர் ஒருவரை வேறெந்த வேதனம் பெறும் பணிகளுக்கு அமர்த்த முடியாது. நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கு இத்தகைய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேல் மாகாண தனியார் போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

மேல் மாகாண தனியார் போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

தகவலறியும் உரிமைச் சட்டம்

எனினும், ஓய்வுபெற்ற நீதியரசர் அல்லது நீதிபதியொருவரை அரச பதவிகளுக்கு நியமிக்கும்போது, நீதித்துறை சேவையின் சுயாதீனத் தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன.

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு | Anura Govt Interference In The Judiciary Dayasiri

முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் தற்போது, ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர விதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவரது நியமன கடிதம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான எந்த கடிதமும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.

முன்னதாக சுயாதீனமாக இருந்த நீதிச் சேவை அதிகாரிகள் சங்கம், காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னர் இந்த அரசாங்கத்தின் அரசியல் கட்சியுடன் இணைந்தது. தற்போது, இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, பல நீதிபதிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அவ்வாறே மிகவும் சிரேஷ்ட நீதிவானாக இருந்த சதுரிக்கா டி சில்வா கல்கிசை நீதிவானாக நியமிக்கப்பட்டு ஓராண்டு கூட பூர்த்தியாகாத நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மகிந்தவை வீடு தேடிச் சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

மகிந்தவை வீடு தேடிச் சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

கைது செய்யுமாறு உத்தரவு

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட பின்னணயில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜித சேனாரத்ன முன்பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டது, நீதவான் இருக்கும்போதே, மேலதிக நீதிவானிடம் சென்று கையூட்டல் ஆணைக்குழு பிடியாணை பெற்று, விடுமுறை நாளில் அவரை கைதுசெய்தது.

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு | Anura Govt Interference In The Judiciary Dayasiri

அரசாங்கத்துடன் தொடர்புடைய நீதிச் சேவை அதிகாரிகளின் குழுக்களே திட்டமிட்டு இத்தகைய செயற்பாடுகளை புரிகின்றன.

இதன்காரணமாக, வெளியக நீதியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரதம நீதியரசர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றோம்! சர்வதேச அரங்கில் அநுர உறுதி

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றோம்! சர்வதேச அரங்கில் அநுர உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி