நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Dayasiri Jayasekara NPP Government
By Sathangani Sep 25, 2025 06:08 AM GMT
Report

கடந்த காலங்களை விட, இந்த அரசாங்கம் நீதித்துறையில் அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, தமக்கு ஏற்றவாறு நீதிபதி ஆயங்களை நியமித்து வழக்குகளை விசாரிக்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசியலமைப்புக்கமைய, நீதிபதி அல்லது நீதியரசர் ஒருவரை வேறெந்த வேதனம் பெறும் பணிகளுக்கு அமர்த்த முடியாது. நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கு இத்தகைய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேல் மாகாண தனியார் போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

மேல் மாகாண தனியார் போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

தகவலறியும் உரிமைச் சட்டம்

எனினும், ஓய்வுபெற்ற நீதியரசர் அல்லது நீதிபதியொருவரை அரச பதவிகளுக்கு நியமிக்கும்போது, நீதித்துறை சேவையின் சுயாதீனத் தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன.

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு | Anura Govt Interference In The Judiciary Dayasiri

முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் தற்போது, ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர விதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவரது நியமன கடிதம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான எந்த கடிதமும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.

முன்னதாக சுயாதீனமாக இருந்த நீதிச் சேவை அதிகாரிகள் சங்கம், காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னர் இந்த அரசாங்கத்தின் அரசியல் கட்சியுடன் இணைந்தது. தற்போது, இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, பல நீதிபதிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அவ்வாறே மிகவும் சிரேஷ்ட நீதிவானாக இருந்த சதுரிக்கா டி சில்வா கல்கிசை நீதிவானாக நியமிக்கப்பட்டு ஓராண்டு கூட பூர்த்தியாகாத நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மகிந்தவை வீடு தேடிச் சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

மகிந்தவை வீடு தேடிச் சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

கைது செய்யுமாறு உத்தரவு

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட பின்னணயில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜித சேனாரத்ன முன்பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டது, நீதவான் இருக்கும்போதே, மேலதிக நீதிவானிடம் சென்று கையூட்டல் ஆணைக்குழு பிடியாணை பெற்று, விடுமுறை நாளில் அவரை கைதுசெய்தது.

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு | Anura Govt Interference In The Judiciary Dayasiri

அரசாங்கத்துடன் தொடர்புடைய நீதிச் சேவை அதிகாரிகளின் குழுக்களே திட்டமிட்டு இத்தகைய செயற்பாடுகளை புரிகின்றன.

இதன்காரணமாக, வெளியக நீதியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரதம நீதியரசர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றோம்! சர்வதேச அரங்கில் அநுர உறுதி

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றோம்! சர்வதேச அரங்கில் அநுர உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025