தூக்கமின்மையால் அவதிப்படுபவரா நீங்கள்; கண்டிப்பாக இதைச் செய்யுங்கள்!
ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஏழு மணி நேரம் நித்திரை கொள்ளவேண்டியது அவசியமாகும்.
இருப்பினும் பெரும்பாலான மனிதர்கள் தூக்கம் இன்மையால் அவதிப்படுகின்றார்கள்.
தூக்கமின்மை பிரச்சனைக்கு எமது அன்றாட பழக்க வழக்கங்களே பிரதான காரணமாக சொல்லப்படுகின்றது.
தீர்வு
அந்தவகையில், எமது நாளாந்த தூக்கத்தை அதிகரிப்பதற்கு பின்வரும் நடைமுறைகளை பின்பற்றலாம்.
தூங்குவதற்கு முன்னர் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தூங்குவதற்கு முன்பு தொலைக்காட்சி பார்த்தல், தொலைபேசியில் கேம்ஸ் விளையாடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
இரவு உணவு சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்துவிட்டு தூங்கச்செல்வது நல்லது.
எமது படுக்கை அறையில் முடிந்தளவுக்கு வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட நடைமுறைகளை பின்பற்றினாலே தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யலாம்.